கொரோனா காலத்தில் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த கைதிகள் 15 நாட்களுக்குள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா 2020 – 2021 கால கட்டத்தில் நாட்டில் உள்ள சிறைகளில் நெரிசலை தவிர்க்க குறிப்பிட்ட கைதிகளுக்கு, உயர் அதிகாரிகளின் பரிந்துரையின் படி பரோல் / ஜாமீன் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அப்படி விடுவிக்கப்பட்ட கைதிகள், விரைவில் அந்தந்த நீதிமன்றங்களில் சரண் அடைய வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவை பிறப்பித்துளது.