திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே, உடல்நலமின்றி இறந்த மனைவிக்கு ரூ.15 லட்சத்தில் கோயில் கட்டி சிலை அமைத்து கணவர் வழிபடுவது பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. திருப்பத்தூர் அடுத்த மான்கானூர் தக்டிவட்டம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(60), கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ஈஸ்வரி(55). இவர்களுக்கு திருமணமாகி 35 ஆண்டுகளாகிறது. 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஆண்டு ஈஸ்வரி உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் சுப்பிரமணி வேதனை அடைந்தார்.