கூடுவாஞ்சேரி: வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலம் கிராமம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த டில்லிகுமார் (48) கொத்தனார். இவருக்கு மனைவி இன்பநாயகி (45), மகன் பரத்குமார் (25), மகள் சந்தியா (23) ஆகியோர் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று பரத்குமாருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அப்போது, அவரை பரிசோதித்த டாக்டர்கள் பரத்குமாருக்கு அப்ரண்டீஸ் உள்ளது. உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை பரத்குமார் திடீரென உயிரிழந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதனை அடுத்து, அவரது பெற்றோர், உறவினர்கள் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு டாக்டர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தது தாம்பரம் உதவி போலீஸ் கமிஷனர் அதிவீரபாண்டியன் மற்றும் தாழம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், டாக்டர்களின் தவறான சிகிச்சைனால் பரத்குமார் உயிரிழந்து விட்டதாகவும், இதுபோன்று ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். எனவே, இனிமேல் இதுபோன்ற மருத்துவமனை இப்பகுதியில் இயங்கக்கூடாது என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக மேற்படி மருத்துவமனையை இழுத்து மூட வேண்டும்.