மாடியிலிருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி

ஆவடி: ஆவடியை அடுத்து திருமுல்லைவாயல் வெங்கடாசலம் நகர் பகுதியை சேர்ந்தவர் அபிராமி (25). தனியார் ஊழியர். இவரது கணவர் பிரவீன் குமார்(30). இவர்களுக்கு லக்கி (1) என்ற மகள் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, இவர் கணவருடன் மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.   அம்பத்தூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு. பின்னர்,  மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அபிராமி உயிரிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து பிரவீன் குமாரிடம் விசாரிக்கின்றனர்.

Related Stories: