மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

ஆவடி: ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(32). எலக்ட்ரிஷியன். இவருக்கு மனைவி மாலதி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.  நேற்று முன்தினம் மாலை ஆவடி அடுத்த கண்ணப்பபாளையம் பகுதியில் மின்மோட்டார் பழுதை சரி செய்யும் பணியில் இவர் ஈடுபட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Related Stories: