காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண்

காங்கேயம்: காங்கேயத்தில் ஓட்டலை சூறையாடி கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகள் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். கடந்த 13-ம் தேதி இரவு வீரணம்பாளையத்தை சேர்ந்த பெரியசாமியின் ஓட்டலை 20-க்கும் மேற்பட்ட முகமூடி கும்பல் ஓட்டலை சூறையாடி உரிமையாளர் பெரியசாமியை குடும்பத்துடன் கொல்ல முயன்ற சிசிடிவி காட்சியுடன் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஓட்டல் சூறையாடப்பட்ட சிசிடிவி காட்சி வெளியானதை அடுத்து அதிமுக நிர்வாகிகள் இருவர் காங்கேயம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.

Related Stories: