பென்னாகரம் அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு நிலையம் முகாமிற்கு வந்தடைந்தது!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட யானைக் குட்டி ஒரு வார கால பராமரிப்புக்கு பின்னர் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு நிலையம் முகாமிற்கு வந்தடைந்தது.

தர்மபுரி மாரண்டஹள்ளி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் 2 குட்டிகளை வனத்தில் யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் பணிக்காக மாரண்டஹள்ளி பகுதியில் முகாமிட்டிருந்த யானைப்பாகன் பொம்மன் தற்போது இந்த 1 வயதுடைய ஆண் யானை குட்டியுடன் முதுமலை வந்தார்.

இந்த யானைக் குட்டி, சமீபத்தில் ஆஸ்கர் விருது பெற்ற இந்திய குறும்படத்தில் இடம்பெற்ற, முதுமலையைச் சேர்ந்த யானைப்பாகன் பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோரின் பராமரிப்பில் முதுமலை யானைகள் பராமரிப்பு மையத்தில் வளர உள்ளது.

யானை குட்டி தற்போது நல்ல உடல் நிலையில் உள்ளது. குட்டி யானை தற்போது மேற்பராமரிப்புக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: