கோவை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி மதிப்புள்ள 6.62 கிலோ தங்கம் பறிமுதல்

கோவை: கோவை விமான நிலையத்தில் ரூ.3.8 கோடி மதிப்புள்ள 6.62 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏர் அரேபியா விமானத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த 11 பயணிகளிடம் இருந்து தங்கம் கைப்பற்றபட்டது. தங்கத்தை கொண்டு வந்த 11 பேரை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தடுத்து நிறுத்தியது. அவர்களின் பைகள், காலணிகள் மற்றும் மலக்குடலில் இருந்து அது தங்கம் மீட்கப்பட்டது. தங்கத்தின் மதிப்பு சுமார் 3.8 கோடி ரூபாய் ஆகும். 11 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: