சென்னை: சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத் தொகைகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் போன்றவற்றை திறந்து வைக்கவுள்ளார். திரவ ஹைட்ரஜன் விநியோக வாகனங்களை வழங்குகிறார். இதேபோன்று 3 துறைகள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக எம்.சாண்ட் மணல் உற்பத்தியை ஒழுங்குபடுத்த புதிய கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார். தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை சார்பில் புதிய கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.
