ஈரோடு: ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஈரோட்டில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நான், வருகிற 10ம் தேதி எம்எல்ஏவாக பதவி ஏற்க உள்ளேன். தொகுதிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும், எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வார்டுகளில் நிலவும் குடிநீர், சாக்கடை கழிவுநீர் மற்றும் சாலை போக்குவரத்து உள்ளிட்ட பிரச்னைகள் அத்தியாவசியமாக தீர்க்கப்பட வேண்டி உள்ளது.