புதுடெல்லி: பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பின் நாட்டில் தனிநபர் வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாஜ பொறுப்பேற்ற 2014-2015ம் ஆண்டில் தனிநபர் வருமானம் ரூ.86,647ஆக இருந்தது. இந்த வருமானம் 2022-2023ம் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 72ஆயிரமாக அதிகரித்துள்ளது. 8 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் 98.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘இந்தியாவின் தனிநபர் வருமானம் குறித்த பாஜவின் தலைப்பு செய்தி நிர்வாகத்தின் வலையில் விழ வேண்டாம்.