பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குக, செங்கை பத்மநாபன் அறிக்கை

சென்னை: பெண்களுக்கு சமஉரிமை தரும் வகையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கவேண்டும் என நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் செங்கை பத்மநாபன் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நமதுரிமை காக்கும் கட்சி மகளிரணியை சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கரமாக இருக்க நம்மால் முடிந்த பல நலத்திட்ட உதவிகளை செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரத்தில், பெண்களே தங்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை கேட்கின்ற நிலையில், பெண்களுக்கு சம உரிமை தரும் வகையில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலிலும் தர கேட்கும் நமது பல ஆண்டு கோரிக்கைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்கிறேன். இதுவே, பெண்களுக்கான உண்மையான மகளிர் தின வாழ்த்துக்களாக அமையும். இதற்கு மாறாக, ஏற்க மறுக்கும் கட்சிகளை மிகப்பெரிய அளவில் பெண்கள் புறக்கணிக்க நேரிடும் என்பதை நமதுரிமை காக்கும் கட்சி சார்பாக எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.

Related Stories: