நன்றி குங்குமம் தோழி
*ஆட்டிசம், துறுதுறு குழந்தைகள் (Hyper active), டவுன்ஸ் சின்ட்ரோம், மூளை வாதம், தாமத வளர்ச்சிப்படிகள் என மற்ற குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு இருப்பதற்கு சாத்தியங்கள் அதிகம்.
*மேல் சொன்ன எந்த கோளாறும் இல்லாமலும் தனியாகவும் இந்த SPD வரக்கூடும்.அறிகுறிகள்...இவை மிகை உணர்ச்சியாய் வெளிப்படுத்துவது, குறை உணர்ச்சியாய் வெளிப்படுத்துவது இரண்டையும் சேர்த்து குறிப்பிடுகிறேன்.*ஆடைகள் ரொம்ப சொரசொரப்பான, அரிப்பு எடுக்கும் வகையில் இருப்பதாய் உணர்வர். குறிப்பாக, கழுத்துப் பகுதியில் வரும் சிறு துணியால் ஆன tag கூட இவர்களுக்கு பெரும் எரிச்சலை விளைவிக்கும்.*சாதாரண வெளிச்சம் கூட அதிக பளிச்சென்று இருப்பதாய் தோன்றும். இதனால் கண்களை அடிக்கடி சுறுக்கிப் பார்ப்பார்கள்.*குறைவான சத்தமும் அதிகமாக இருக்கும். மிக்ஸி, குக்கர் என்றால் வேறு அறைகளுக்கு ஓட முயல்வார்கள்.*நாம் சாதாரணமாக அவர்களுக்கு வருடுவது கூட கடினமாய் தெரியும். சில குழந்தைகளுக்கு அம்மாக்கள் அடிக்கடி கொஞ்சினால் கூட பிடிக்காது.*புதிய உணவுப் பொருட்களை முயற்சி செய்வதில் சிக்கல் இருக்கும். அதனால் தினமும் ஒரே உணவையே உண்பர். மாற்று முயற்சியை தடாலடியாய் பெற்றோர்கள் தெரியாமல் செய்துவிட்டால் அவ்வளவுதான். அன்று முழுவதும் அந்த உணர்வில் எதையும் சாப்பிட மாட்டார்கள்.*அமைதியாய் ஓரிடத்தில் அமர்வதில் சிக்கல் ஏற்படும்.*த்ரிலிங்காக விளையாடுவது (குதிப்பது, அதிக உயரம், சுற்றுவது) அனைத்தும் மிகப் பிடிக்கும்.*எவ்வளவு சுற்றினாலும் தலை சுற்றாது அவர்களுக்கு.*மற்றவர்களின் செயல்கள் மூலம் என்ன செய்கிறார்கள் என இவர்களால் புரிந்துகொள்ள முடியாது.*மற்றவர்கள் மேல் விழுவது, அந்நியர்கள் எனினும் அவர்களை கொஞ்சுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.*எது கிடைத்தாலும் கடிப்பார்கள் (துணிகள், விளையாட்டு பொருட்கள்).*பார்வை சார் தூண்டல்களை இவர்கள் அவ்வப்போது நாடுவர்.*தூங்குவதில் சிக்கல்கள்.*அவர்களின் முகமோ, கை கால்களோ அழுக்காய் இருந்தால் அவர்களுக்குத் தெரியாது. மூக்கு ஒழுகினாலும் அவர்களுக்கு தெரியாது.*அதிகப்படியான குளிர், வெப்பம், வலி எதுவாயினும் அவர்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த மாட்டார்கள்.நாம் அவர்களை புரிந்துகொள்ளாமல் மேற் சொன்ன அறிகுறிகளுக்கு நேர்மாறாய் எதையாவது செய்தால் அதிகமாக தூண்டப்பட்டு எரிச்சலடைவர். அதனால் இவர்களை இவர்களே சாந்தப்படுத்திக் கொள்ள த்ரிலிங்கான முயற்சிகளில் ஈடுபடுவர். உதாரணமாக, உயரத்தில் இருந்து குதிப்பது, வேகமாக ஊஞ்சலில் விளையாடுவது, திரும்பத் திரும்ப உடலை சுற்றிக்கொண்டே இருப்பது. இவர்கள் மிகையாகவும் எதிர் உணர்ச்சியை வெளிப்படுத்துபவராக இருக்கலாம், இல்லை குறைவாகவும் வெளிப்படுத்தலாம். அல்லது இரண்டும் கலந்தும் இருக்கலாம்.மன உளைச்சல்...* இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்ல தயங்குவார்கள்.*பாதித்த குழந்தைகள் மற்றவர்களுடன் பேசுவதிலும், விளையாடுவதிலும் சிரமமாய் தோன்றும் என்பதால் பெற்றோர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கும்.*சில பெற்றோர்களுக்கு இவை அனைத்தும் ஒரு வகை கோளாறு. இதற்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கும். அத்தகையவர்களுக்கு புரிய வைப்பதிலும் சிக்கல் இருக்கிறது.எப்படி கண்டறிவது...?மேல் உள்ள அறிகுறிகள் உங்கள் குழந்தைகளுக்கு இருப்பதாய் நீங்கள் உணர்ந்தால் அருகில் உள்ள குழந்தைகளுக்கான இயன்முறை மருத்துவரை அணுகவும். அவர் நீங்கள் சொல்லும் தகவல்களை வைத்தும், அவர் கண் எதிரில் குழந்தையின் குணநலன் எப்படி இருக்கிறது எனப் பரிசோதித்து எவ்வகையான பாதிப்புகள் இருக்கிறது என்றும் கண்டறிவர்.தீர்வுகள்...முதலில் நாம் உணர வேண்டியவை,1.இது ஒரு நோய் அல்ல.2.மற்ற குழந்தைகளுக்கு இவை பரவாது.3.இதனை முழுமையாக சரி செய்யலாம்.4.இதற்கு மருந்து மாத்திரைகள் எதுவும் உதவாது, கிடையாது.5.இதை சரி செய்யாமல் விட்டால் குழந்தையின் வளர்ச்சியை எல்லா வகையிலும் பாதிக்கும். அதாவது, உடல், மூளை, குணம், யோசிக்கும் திறன், சமூகப் பழக்கம் என எல்லா வகையிலும் பாதிக்கும்.தடுக்கும் வழிகள்...இந்தக் கோளாறு எதனால் வருகிறது என முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், வாழ்க்கை முறையை சரியாய் குழந்தைகளுக்கு அமைத்துத் தருவதன் மூலம் வந்தாலும் நிலைமை மோசமாகாமல் தடுக்கலாம். மேலும் இவ்வழிகள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும் என்பதால் இதனைக் கடைப்பிடித்தல் அவசியம்.*குழந்தைகளுக்கு எல்லா விதமான உணவுகளையும் சிறுவயது முதலே கொடுத்துப் பழக்கவேண்டும்.* மணலில் விளையாட, மற்ற குழந்தைகளுடன் விளையாட, சாப்பிட என அனைத்து வகை முயற்சிகளையும் அடிக்கடி செய்யவேண்டும்.* எல்லா விதமான தொடு உணர்வுகளுக்கும் குழந்தை பழக வேண்டும். அதனால் நீங்கள் வேலைகள் செய்யும்போது அவர்களையும் அதில் ஈடுபடுத்தலாம். உதாரணமாக, வெறும் காலில் மொட்டை மாடியில் நடப்பது, துணி துவைக்கும்போது விளையாடுவது, காய்கள், பழங்கள் நறுக்கும்போது அவர்களையும் அதில் ஈடுபடுத்துவது போன்றவற்றை சொல்லலாம்.* குழந்தைகளை அவ்வப்போது உடல் சார்ந்தும், மூளை சார்ந்தும் சிறுசிறு வேலைகளை செய்யச் சொல்வது, கேள்விகள் கேட்டு பதில் சொல்ல வைப்பது, அவர்களாக எதையாவது உருவாக்கத் தூண்டுவது (வீடு கட்டுவது, படம் வரைவது போன்று) போன்றவற்றை மேற்கொள்ளலாம்.* குழந்தைகள் செய்யும் தவறுகளை கோபப்பட்டு அடிக்காமலும், திட்டாமலும் பக்குவமாக எடுத்துச் சொல்லி சரிசெய்யலாம். அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டி, பரிசுகள் வாங்கித்தந்து, அதைவிட பெரிய விஷயங்கள் செய்யச் சொல்லித் தூண்டலாம். செய்தால் இன்னின்ன பரிசுகள் வாங்கித்தருவோம் என ஊக்குவித்து உற்சாகப்படுத்தலாம்.* குழந்தைகளின் நடவடிக்கைகளில் தெரியும் சிறுசிறு மாற்றங்களையும் மிக உன்னிப்பாக கவனித்து அதை அவ்வப்போதே சரிசெய்யலாம்.இயன்முறை மருத்துவம்...* தொடர்ந்து தெரபி எடுத்து வந்தால் எளிதில் குணமடையும்.* கோளாறின் தாக்கம் பொருத்து தினமும் அல்லது வாரத்தில் மூன்று நாள் போல தெரபி அமையும்.* ஒரு நாளைக்கு அரை மணி நேர தெரபியே போதுமானது.* தெரபியின் மூலம் உணர்ச்சிகளை ஓர் ஒழுங்குக்கு கொண்டுவர முடியும்.* குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பை பொருத்து விளையாட்டு வழியில் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவர்.* வீட்டில் என்னென்ன செய்ய வேண்டும் எனும் அறிவுரைகளையும் வழங்குவர்.எனவே மூக்கும் முழியுமாக லட்சணமாக நம் குழந்தைகள் இருந்தாலும் இவ்வகை கோளாறு இருக்கிறது எனக் கலங்காமல் இயன்முறை மருத்துவத்தின் துணைகொண்டு நம் வீட்டு மலர்களை மீண்டும் புதிதாய் மலரவிடுவோம். 