காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் அமைந்துள்ள காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல் துறை இணைந்து, தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ‘இளைஞர்களுக்கு அறிவியலின் முக்கியத்துவம்’ எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், துணை முதல்வர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் தாளாளர் அரங்கநாதன், தலைவர் சாய்ராம், செயலாளர் மாதவன், பொருளாளர் பிரதீப்குமார் மற்றும் இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.