போடி: போடி அருகே அடகுபாறை மலையின் வனப்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் 2வது நாளாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் போடிமெட்டு, குரங்கணி உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த வரிசையில் குரங்கணி, கொட்டகுடி பகுதியில் பல்வேறு கிராமங்களில் ஏலம், காபி, மிளகு, இலவம், மா, எழுமிச்சை, கொய்யா உள்ளிட்ட பல்வேறு விவசாய சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முந்தல் மலை அடிவாரத்தில் இருந்து குரங்கணி மலைச்சாலையில் உள்ள பிச்சாங்கரைக்கு அடுத்ததாக அடகுபாறை என்ற மலைப்பகுதி அமைந்துள்ளது.