திருச்சி: திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நன்னிமங்கலம் கிராமத்தில் உள்ள அக்ரஹாரம் தெருவில் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நேற்று புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதில் சுமார் 20 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அப்போது ஆழ்துளை கிணற்றில் மண் பகுதியில் ஏதோ ெபாருள் சிக்குவதுபோன்று தொழிலாளர்கள் உணர்ந்தனர். இதையடுத்து அந்த பொருளை வெளியே எடுத்து பார்த்தபோது, ஐம்பொன்னாலான அம்மன் சிலை என தெரியவந்தது.