திருத்தணி: திருத்தணி நகரத்தில் வீடு இல்லாதவர்கள் சாலையோர நடைபாதை, சாலைகள், மரத்தடிகள் என பல்வேறு இடங்களில் தங்கியுள்ளனர். இதில் பெரும்பாலானோர் பேப்பர், பிளாஸ்டிக், இரும்புகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து கடையில் போட்டுவிட்டு ஓட்டலில் சாப்பிடுவர்கள். மேலும் சிலர் வீட்டு திண்ணைகளிலும் தங்குவார்கள். அப்போது பெரும்பாலான வீட்டு உரிமையாளர்கள் அவர்களை அடித்து விரட்டுவார்கள். மேலும் மழை மற்றும் குளிர்காலங்களில் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாளாகி வந்தனர். இந்நிலையில் அவர்களுக்காக நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் வீடற்ற உறுப்பினர்கள் தங்க சுமார் ரூ.70 லட்சம் மத்திப்பில் காப்பகம் கட்டப்பட்டது.