டெல்லி: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை இன்றே விடுவிக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் 49-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர், மாநிலங்களுக்குக்கான ஜூன் மாதம் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.16,982 கோடியை விடுவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார். இதில், தமிழகத்திற்கு ஜூன் மாதம் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 விடுவிக்கப்படுகிறது என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.