டெல்லி : கடந்த பிப்ரவரி 6ம் தேதி துருக்கியை தாக்கிய நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு நாடுகளிலும் நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த 4 நாட்களில் உலகின் பல்வேறு நாடுகளிலும் சங்கிலி தொடர் போல நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றன. கடந்த பிப்ரவரி 14ம் தேதி ரோமானியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல பிப்ரவரி 15ம் தேதி நியூசிலாந்தில் 6.1 அளவிலும் கொலம்பியாவில் 5.2 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பிப்ரவரி 16ம் தேதி பிலிப்பைன்ஸில் 6.1 ரிக்டர் அளவிலும் அமெரிக்காவின் ஓசன்வியூவில் 4.8 ரிக்டர் அளவிலும் ஆப்ரிக்க நாடான காங்கோவில் 5.3 ரிக்டர்அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.