கோவை அருகே வீட்டில் இருந்த பெண்ணை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி; போலீசார் விசாரணை..!!

கோவை: கோவை மாவட்டம் கோவைபுதூர் தில்லை நகரில் வீட்டில் இருந்த சங்கீதா என்பவரை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி செய்யப்பட்டது. கொரியர் கொடுப்பது போல் வந்த அடையாளம் தெரியாத நபர் சங்கீதாவை கத்தியால் தாக்கி நகை பறிக்க முயற்சி செய்தார். சங்கீதா சத்தம் போட்டதால் அடையாளம் தெரியாத நபர் தப்பியோடிவிட்டார். சம்பவம் குறித்து குனியாமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: