வெளியூர் பெண்ணை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண், 3 இளைஞர்கள் கைது-பெரியகுளம் போலீசார் நடவடிக்கை

பெரியகுளம் : பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட அழகர்சாமிபுரத்தில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பெரியகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீனாட்சி தலைமையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது தேனி, அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சுபிதா மற்றும் சேதுமூர்த்தி, ராமமூர்த்தி, விஷ்ணு ஆகியோர் வீடு வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வருவது உறுதியானது.

மேலும் அந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக அவர்களால் வெளியூரில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண் ஒருவரும் இருந்தார். அந்த பெண்ணை மீட்ட போலீசார் காப்பகத்தில் சேர்த்தனர். பாலியல் தொழில் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சுபிதா உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் நால்வரும் நீதிபதி உத்தரவின் அடிப்படையில் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: