திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி சார்பில் வேலைவாய்ப்பு திருவிழா சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமை துவக்கி வைத்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 18 மாதத்தில் 1800 பேர் வேலைவாய்ப்பை பெற்றனர் என்று தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசுகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தனியார் துறை மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மிகவும் பயனளிக்கக்கூடியது என்றார்.