சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த ஆட்சியில் எய்ம்சுக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோதே 200 ஏக்கர் நிலம் அவர்களுக்கு தரப்பட்டு விட்டது. மேலும் கூடுதலாக 22 ஏக்கர் நிலம் கேட்டிருந்தார்கள். அதுவும் 22.49 ஏக்கர் நிலம் உடனடியாக கொடுக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத்தில் சொல்லியிருப்பது போல் கடந்த அதிமுக அரசில் கூட நிலம் கொடுப்பதில் தாமதம் இருந்தது என்று சொல்லக்கூடிய கூற்று ஏற்கத்தக்கது அல்ல. 222.47 ஏக்கர் நிலம் அன்றைக்கு அவர்களுக்கு தரப்பட்டு விட்டது.