ஜோத்பூர்: பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய அமைச்சரும், முன்னாள் டிவி நடிகையுமான ஸ்மிருதி இரானியின் மூத்த மகள் ஷானெல் இரானிக்கும், வெளிநாடு வாழ் இந்தியரான வழக்கறிஞர் அர்ஜுன் பல்லா என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் திருமண விழா நடைபெற உள்ளது. ஜோத்பூருக்கும் நாகவுருக்கும் இடையில் அமைந்துள்ள கின்சர் கோட்டையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.