கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளோம்: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: வளர்ச்சி பெட்ரா நாடுகளின் வரிசையில் இந்திய மூன்றாவு இடத்தை னொளி முன்னேறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டிஜிட்டல் முரையில் பல லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெறுகிறது என்று அவர் கூறியுள்ளார். இந்திய உற்பத்தி நாடக மாரி கொண்டிருப்பதை உலக நாடுகள் கண்டுகொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை சான்றிதழ் நம் தேசத்தில் உடனடியாக கிடைக்கின்றன அதுமட்டுமின்றி விநியோக சங்கிலி மூலம் கொரோனா தடுப்பு மருந்தை உலகமெங்கும் கொண்டு சேர்த்தோம் என தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரம் வளரிச்சியடைந்துள்ளது எனவும் விலைவாசி குறைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குட்டிக்கதை ஒன்றை உதாரணம் காட்டி மக்களவையில் சிரிப்பலை பிரதமர் மோடி பேசியுள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாகுமாரி வரை எந்த தீவிரவாதமும் நடைபெறவில்லை என்று மோடி குறியுளளார். கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்கள் முதல் காஷ்மீர் வரை எந்தவொரு நக்ஸல் நடவடிக்கையும் கிடையாது என்றும் மோடி கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியில் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

நாட்டின் 130 கோடி மக்களும் ஜனாதிபதி உரையை வரவேற்றுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளில், ஊழலில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளது என தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களுடைய குணநலனுக்கு ஏற்றவாறு உரையாற்றினர் பிரதமர் மோடி.

சிலர் பேசியதை கூர்ந்து கேட்ட போது அவர்களுக்கு திறனும், புரிதலும் குறைவாக இருப்பது தெரிய வருகின்றது. எதிர் கட்சியினர் குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.  நாட்டின் 130 கோடி மக்களும் ஜனாதிபதி உரையை வரவேற்றுள்ளனர், காங். கட்சி செய்த விளைவுகள் அவர்களையே சுடத்தான் செய்யும்.உலகளவில் கொரோனா தடுப்பூசி போட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு  இந்தியா உதவி செய்துள்ளது. இவ்வாறு மக்களவையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.  

Related Stories: