சிறுவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் 3 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவு!!
மதுரை : சிறுவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் 3 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குண்டர் சட்டத்தில் கைதானவர்கள் மீது காவல்துறை எழுத்துப்பூர்வ தகவலை உரிய நேரத்தில் வழங்காததால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே நேரம், தமிழக அரசின் சிறுவர்கள் பாதுகாப்பு சிறப்பு சட்டத்தின் படி குண்டர் சட்டத்தில் கைது செய்ததில் தவறு இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.