டிப்போவில் தூங்கிய மாநகர பேருந்து கண்டக்டர் மரணம்

தண்டையார்பேட்டை: காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாநகர பேருந்து நடத்துனர் கதிர்வேல் (52). இவர், தண்டையார்பேட்டை டிப்போவில் தங்கி பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்தார். இவர், விடுமுறை தினங்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு டிப்போவில் தூங்கிக் கொண்டிருந்தவர் நேற்று காலை எழுந்திருக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதித்த மருத்துவர்கள் கதிர்வேல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதைதொடர்ந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, அவர் எதற்காக இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: