பெங்களூரு: புதுப்பிக்கதக்க எரிசக்தி மேம்பாடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச எரிசக்தி கண்காட்சியை பெங்களூருவில் பிரதமர் இன்று தொடங்கி வைக்கிறார். ஜி-20 எரிசக்தி மற்றும் புதுப்பிக்கதக்க எரிசக்தி கண்காட்சியை பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய எரிசக்தி அமைச்சகம் செய்துள்ளது. இதையொட்டி நேற்று பெங்களூரு-துமகூரு சாலையில் உள்ள பெங்களூரு சர்வதேச கண்காட்சி மையத்தில் மாநாடு தொடங்கியது. இதில் பல்வேறு நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு மற்றும் கண்காட்சியில் இந்தியாவில் எதிர்க்கால எரிசக்தி மேம்பாடு குறித்து விவாதிப்பதற்காக ‘‘இண்டிய எனர்ஜி வீக்-2023’’ என்ற பெயரில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு திறந்து வைத்து உரையாற்றுகிறார். கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.