அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்தவர் முகமது இலியாஸ்(36). மின்னல் கிராம விஏஓ. இவருக்கு, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று வீட்டில் இருந்த முகமது இலியாஸ் திடீரென கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.