கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மிகவும் மோசமாக மக்களுடைய வாழ்வு நிலையை பாதிக்க கூடியது.முழுக்க முழுக்க பெரும் முதலாளிகளையும் பணக்காரர்களையும் வாழவைக்கும் ஒரு பட்ஜெட்டாக உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பட்ஜெட்டாகவே உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டன.