சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் மாநில கல்லூரி அருகே 2 மாணவர்கள் குழு ரூட் தல பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் கடந்த 31ம் தேதி மோதிக்கொண்டனர். புகாரின் படி, போலீசார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக 3 மாணவர்களை கைது செய்தனர்.