சென்னை: இந்திய கடலோர காவல்படையின் 46வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில், கடல் அலையில் சிக்கியவர்களை மீட்பது, ஊடுருவலை தடுப்பது என பாதுகாப்பு ஒத்திகையில், ஹெலிகாப்டர் மற்றும் கப்பல்கள் ஈடுபட்டன. இந்திய கடலோர காவல்படையின் 47வது எழுச்சி தினம், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், கடலோர காவல்படை சார்பில் 2 நாள் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணி ஒத்திகை நடந்து வருகிறது. அந்த வகையில் இந்திய கடலோர காவல்படையின் ரோந்து கப்பல்கள், ஹெலிகாப்டர் மூலம் சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையோரம் தங்களது ரோந்து கப்பகளை நிறுத்தி, பொதுக்கள் கடல் அலையில் சிக்கினால் அவர்களை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து நடித்து காட்டினர்.