திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலையில் தீ விபத்து

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாதப்பூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை உள்ளது. அங்குள்ள குடோனில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  இந்நிலையில் பழைய சிலிண்டர்கள், இயந்திர உதிரி பாகங்கள், தார் மற்றும் என்னை கேன்கள் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மளமளவென எரியத் தொடங்கியது.

 தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள்  மூன்று மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து விபத்திற்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: