சென்னை: சுதந்திர போராட்டத்தின் போது உயிர் நீத்த தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகர போக்குவரத்து சிக்னல்களில் காலை 11 மணிக்கு 2 நிமிடங்கள் வாகன ஓட்டிகள் சாலைகளில் தங்களது வாகனங்களை நிறுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர். காந்தியடிகளின் நினைவு நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி, சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி மாநகர காவல் எல்லையில் உள்ள அனைத்து முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் உயிர் நீத்த தியாகிகளுக்கு 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.