பெரம்பூர்: சென்னை கொளத்தூர் சிவசக்தி நகர் 6வது தெருவை சேர்ந்தவர் காத்தாயி (38). இவரது கணவர் முனுசாமி, சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர், திருவண்ணாமலையில் தனது உறவினர்களுடன் வசித்து வருகிறார். காத்தாயி தனது மூத்த மகன் தர்மதுரை (17), இளைய மகன் தங்கதுரை (13) ஆகிய 2 பேருடன் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறார். கொத்தனார் வேலை செய்து வரும் காத்தாயி மது பழக்கத்திற்கு ஆளாகி, தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மகன்களுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதால், தங்களுக்கு அவமானமாக உள்ளது, என மகன்கள் கண்டித்துள்ளனர்.