சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நேற்று வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ் வாதிடும்போது, ஆதாரங்களை காவல்துறை உடனடியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போன்களையும், அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் பதிவான வீடியோவின் ஹார்ட் டிஸ்கையும் நடைமுறைகளை பின்பற்றாமல் காவல்துறை கையாண்டுள்ளது.