2022-23ம் ஆண்டில் ஐசிஎப் 1110 ஏசி ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை

சென்னை:  2022-23ம் ஆண்டில் ஐசிஎப் 1110 ஏசி ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது என ஐசிஎப் பொது மேலாளர் பி.ஜி.மால்யா தெரிவித்துள்ளார். ஐ.சி.எப் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில், ஐசிஎப் பொதுமேலாளர் பி.ஜி.மால்யா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஐசிஎப் தொழிற்பயிற்சி மையம், ஐசிஎப் பள்ளிகளின் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர், ஐசிஎப் பொதுமேலாளர் பி.ஜி.மால்யா கூறுகையில், ஐசிஎப் இந்த ஆண்டில் இதுவரை 2,000 ரயில்பெட்டிகளை தயாரித்துள்ளது. அவற்றுள் 7  வந்தே பாரத் தொடர்களும், 8 நெடுந்தொலைவு புறநகர் ரயில்களும், 2 ஏசி புறநகர் ரயில் தொடர்களும் அடங்கும். இவ்வாண்டில் முன் எப்போதும் இல்லாத வகையில், ஐசிஎப் 1110 ஏசி ரயில்பெட்டிகளை தயாரித்து சாதனை செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: