சென்னை: 2022-23ம் ஆண்டில் ஐசிஎப் 1110 ஏசி ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்துள்ளது என ஐசிஎப் பொது மேலாளர் பி.ஜி.மால்யா தெரிவித்துள்ளார். ஐ.சி.எப் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற 74வது குடியரசு தினவிழாவில், ஐசிஎப் பொதுமேலாளர் பி.ஜி.மால்யா தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ஆர்பிஎப் வீரர்கள் மற்றும் ஐசிஎப் தொழிற்பயிற்சி மையம், ஐசிஎப் பள்ளிகளின் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.