சென்னை: சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு பிப்ரவரி 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொதுப்பணியில் சுற்றுலா அலுவலர் பதவியில் காலியாக உள்ள 3 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் இணையதளம் www.tnpscexams.in, www.tnpsc.gov.in வாயிலாக அடுத்த மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்ய அடுத்த மாதம் 28ம் தேதி பகல் 12.01 மணி முதல் மார்ச் 2ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.