மொழிப்போர் தியாகிகள் தினம் தாளமுத்து நடராசன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து நடராஜன், டாக்டர் தர்மாம்பாள் நினைவு இடத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின், மூலக்கொத்தளம் சந்திப்பில் இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மூலக்கொத்தளம் மயானத்தில் உள்ள தாளமுத்து நடராசன்,  டாக்டர் தர்மாம்பாள் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது, திமுகவினர் மொழிப்போர் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூர்ந்தனர்.

 நிகழ்ச்சியில் மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ., சென்னை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் இளைய அருணா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரீம் மூர்த்தி, ஜெ.ஜெ. எபினேசர், ஆர்.டி.சேகர், மாநில வர்த்தக அணி இணை அமைப்பாளர் பாண்டிச்செல்வம், மண்டல குழு தலைவர்கள் நேதாஜி கணேசன், ராமுலு, பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், செந்தில்குமார், ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், வட்ட செயலாளர்கள், கவுரிஸ்வரன், பாலன், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் மருது கணேஷ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி  மற்றும் திமுகவினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Related Stories: