கோயிலுக்குள் அனுமதி மறுப்பது யார்? ஐஸ்வர்யா ராஜேஷ் ஆவேசம்

சென்னை: கடவுளுக்கு எல்லோரும் ஒன்றுதான். கோயிலுக்குள் சிலரை அனுமதிக்க மறுப்பது மனிதர்கள்தான் என்றார் ஐஸ்வர்யா ராஜேஷ். மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தமிழில் ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இது தொடர்பான நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது கூறியது: கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான்.

ஆண், பெண் என்றோ, இந்த சாதி, அந்த சாதி என்றோ கடவுள் பார்ப்பதில்லை. அப்படி இருக்கும்போது, இவர்கள்தான் கோயிலுக்கு வர வேண்டும். இவர்கள் வரக்கூடாது என சொல்வதற்கு மனிதர்கள் யார். எந்த கடவுளும் என் கோயிலுக்கு இவர்கள் வரலாம், இவர்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. அப்படி எந்த கடவுளாவது சொல்லி இருக்கிறார்களா. எந்த கடவுளும் இப்படியொரு சட்டம் போடவில்லை. எல்லாமே மனிதர்கள் உருவாக்கியதுதான். இதுபோன்ற கட்டுப்பாடுகளை நான் எப்போதும் நம்புவதில்லை.  இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.

Related Stories: