திருமலை: திருப்பதியில் லட்டு கவுண்டரில் ஊழியர் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஆசாமி ரூ.2 லட்சம் பணத்தை திருடிச்சென்று விட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக லட்டு விற்பனை செய்யும் கவுண்டர்கள் கோயிலின் மேற்கு மாட வீதியை ஒட்டி உள்ளது. இங்கு 24 மணி நேரமும் பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 36-வது எண் கவுண்டரில் இருந்த ஊழியர் பணியை முடித்துக் கொண்டு லட்டு விற்பனை செய்யப்பட்ட பணத்துடன் கவுண்டரிலேயே தூங்கிக்கொண்டிருந்தார்.