சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் வருகிற 29ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29ம் தேதி காலை 11 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒன்றிய அரசின் 2023-24ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பொருள் குறித்து கூட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.