திருச்சி: பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு தை மாத தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் நாளை மறுதினம் (26ம் தேதி) துவங்குகிறது. இவ்விழா பிப்.5ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் கொடிப்படம் புறப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் நாளில் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனம், மாலையில் ஹம்ச வாகனம், 3ம் நாளில் சிம்ம வாகனம், மாலையில் யாளி வாகனம், 4ம் நாளில் இரட்டைபிரபை வாகனம், மாலையில் கருட வாகனம், 5ம் நாளில் சேஷ வாகனம், மாலையில் ஹனுமந்த வாகனம், 6ம் நாளில் கற்பக விருட்சம் வாகனம், மாலையில் யானை வாகனம், 7ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது.