சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு, கவுன்சலிங் மூலம் இடமாற்றம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அரசு ஊதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில், உள்ளூர் தனியார் பள்ளிகளின் போட்டி காரணமாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால், மாணவர்கள் ஆசிரியர்கள் விகிதாசாரத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்களா என்றும், கூடுதல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றார்களாக என்றும் பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. மேலும், சில அரசு உதவி பெறும் பள்ளிகளில் பல ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதும் தெரியவந்துள்ளது.