திருவண்ணாமலை: அடுத்த ஆறு மாதக் காலத்திற்குள் கீழடி அருங்காட்சியகத்தை மயன் மாளிகை அருங்காட்சியமாக உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அருணை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழர் திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் அருணை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அறிஞர்களுக்கு பல்வேறு விருதுகளை வழங்கி அமைச்சர் தங்கம் தென்னரசு பாராட்டி கௌரவித்தார்.