வேங்கைவயல் சம்பவம் புதுகை கலெக்டரிடம் மநீம கோரிக்கை மனு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: வேங்கைவயலுக்கு சென்னையில் இருந்து சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சி மாநில செயலாளர்கள் அர்ஜுனர், வினோத், சஜீஸ், பிரகாசினி மற்றும் புதுகை மாவட்ட கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் ராஜகோபால் உள்ளிட்டோர், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, மநீம தலைவர் கமல்ஹாசன் சார்பில் பேசினர். இது சம்பந்தமான தொடர் நடவடிக்கைளில் மநீம பங்கேற்கும் என்று உறுதி அளித்தனர். பிறகு இக்குழுவினர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை அவரது இல்லத்தில் சந்தித்து, மநீம சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: