சென்னை: மொழிப்போர் தியாகிகளுக்கு வரும் 25ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில் அஞ்சலி செலுத்த வேண்டுமென மாவட்டசெயலாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை: இந்திமொழி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது தாய் மொழியாம், தமிழ் மொழியை காக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜன. 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.