நியூயார்க்: அமெரிக்காவின் பெட்ரோல் பங்கில் பணியாற்றிய இந்திய வம்சாவளி ஒருவர், முகமூடி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் பிலடெல்பியா பகுதி பெட்ரோல் நிலையத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பட்ரோ சிபோராம் (67) என்பவர் இரவு நேர ஷிப்டில் பணியாற்றி வந்தார். கடந்த 1988ம் ஆண்டு வாக்கில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த அவர், தொடர்ந்து அந்த பங்கில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் பெட்ேரால் நிலையத்திற்கு கொள்ளையடிக்க வந்த 3 முகமூடி கொள்ளையர்கள், பணியில் இருந்த பட்ரோவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.