சென்னை: கடலோர பாதுகாப்பு பயிற்சி வகுப்பு பிப்ரவரில் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் மீனவர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவர்களின் வாரிசுகளுக்கு இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கப்பற்படையில் நவிக், மாலுமி பணி, இதர தேசிய பாதுகாப்பு பணிகளிலும் சேருவதற்கு ஏதுவாக இலவச சிறப்புப் பயிற்சி வகுப்புகள் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.