ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை: தலைவர் அன்புமணி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில் அறிவுப்பு வெளியாகியுள்ளது. ஒரு எம்.எல்.ஏ. காலமானால், அவர் சார்ந்த கட்சிக்கே அந்த இடத்தை ஒதுக்கிவிட வேண்டும் என்பதே பாமகவின் கொள்கை என கூறிய அன்புமணி, இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப்பணம், நேரத்தை வீணடிப்பவை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Related Stories: